முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதுாறு கருத்து - பாஜக நிர்வாகி அதிரடி கைது..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அவதுாறு கருத்து வெளியிட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
பாஜக நிர்வாகி கைது
கடலுார் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் கடலுார் மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங்க் தலைவராக இருந்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இது குறிதது திருநெல்வேலி மாவட்ட திமுகவினர் திருநெல்வேலி போலீசில் புகார் அளித்தனர்.
புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த திருநெல்வேலி போலீசார் கடலுார் சென்று பாஜக நிர்வாகி ஜெய்குமாரை இன்று கைது செய்தனர்.
இதையடுத்து ஜெய்குமாரை போலீசார் விசாரணைக்காக திருநெல்வேலி அழைத்துச் சென்றனர்.