அண்ணாமலை இல்லாத போதும் நடைபெறும் கூட்டம்...எடுக்கப்படும் முக்கிய முடிவு..?
இன்று சென்னை அமைந்தகரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இல்லாமல் பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கியுள்ளது.
தமிழக பாஜக
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், தமிழக பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலையும் தனியாக சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய கூட்டணியை பாஜக உருவாகும் என எதிர்பார்க்கப்படும் என கூறப்படும் நிலையில், அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டு திரும்பினார்.
அவர் தமிழகத்தில் இல்லாத நிலையில், சில தினங்கள் முன்பு தமிழக பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடிப்பெற்றது. கேசவ விநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்கப்பதற்கு முன் பேசிய தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி அதிமுகவுடன் கூட்டணியில் நீடிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அண்ணாமலை இல்லை
அண்ணாமலை நேற்று தமிழக திரும்பிய நிலையில், அவர் இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அண்ணாமலை இந்த கூட்டத்தில் சற்று தாமதாக பங்கேற்று கொள்வர் என்று கூறப்படுகிறது .அண்ணாமலை இல்லாத போதிலும் கூட்டணி குறித்தும், தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
அவர் இல்லாமலே இன்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டம் துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், என் மண் என் மக்கள் பாதயாத்திரையும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.