பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு

police bjp fight congress ambedkar
By Praveen Apr 14, 2021 10:46 PM GMT
Report

அபிேஷகப்பாக்கத்தில் பா.ஜ., மற்றும் காங்., கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, பா.ஜ,, மாநில பொதுச் செயலாளர் ஏம்பலம் செல்வம் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை, அபிேஷகப்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர், அவர்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டனர்.

அரசு பள்ளி அருகே சென்றபோது, எதிரில் காங்., கட்சியை சேர்ந்த அனந்தராமன் ஆதரவாளர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.அப்போது, போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், காரில் சென்ற பா.ஜ.,வினர் ஹாரன் அடித்தனர்.

அதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடன், அங்கிருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.