பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது - அண்ணாமலை!

Tamil nadu BJP K. Annamalai
By Jiyath Nov 12, 2023 02:30 AM GMT
Report

பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சியில், நாடு முழுவதும் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் கிடைக்கப்பெற்று வருகின்றன.

பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது - அண்ணாமலை! | Bjp Annamalai S Tweet About Pm Modi

நமது நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில்தான், அருந்ததியர் சமூகத்திற்கும் மாதிக சமூகத்திற்கும், பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.

இரு பெரும் சமூகத்தின் பிரதிநிதிகளாக மாண்புமிகு மத்திய இணையமைச்சர்கள் அண்ணன் எல்.முருகன் அவர்களும், திரு. A. நாராயணசுவாமி அவர்களும், மத்திய அமைச்சரவையை அலங்கரிக்கிறார்கள்.

மகிழ்ச்சி அளிக்கிறது

மத்திய அமைச்சரவையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள். பட்டியல் சமூக மக்கள் முன்னேற்றத்திற்காக, மத்திய அரசின் இந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு, 1.59 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது - அண்ணாமலை! | Bjp Annamalai S Tweet About Pm Modi

ஆண்டு தோறும் இந்த ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் பட்டியல் சமூக மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெறும், மாதிக சமூக மக்களின் விஸ்வரூப மகாசபா மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.