ஹெலிகாப்டர் விபத்து நிகழந்த இடத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

Death CM MK Stalin Visit Bipin Rawat
By Thahir Dec 08, 2021 01:34 PM GMT
Report

ஹெலிகாப்டர் விபத்து நிகழந்த இடத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் பிற்பகலில் இந்தியாவின் முப்படைத் தளபதி மற்றும் அவருடன் பயணித்த மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்து ஏற்ப்பட்ட இடத்தையும், காயமுற்றவர்களையும் நேரடியாக பாா்வையிடுவதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, தலைமை செயலாளர் இறையன்பு,அமைச்சர்கள் கே என் நேரு,எ.வா.வேலு,உயர் அதிகாரிகள் உதய சந்திரன்,டேவிட்சன், உதயசந்திரன், தினேஷ்குமார்,நிதின் ஜான், சதிஷ் ஆகியோர் கோவைக்கு புறப்பட்டு சென்றனர்.அங்கிருந்து சாலை மார்க்கமாக நீலகிரி புறப்பட்டுச் செல்கின்றனர்.