அப்பாவி தொழிலாளியை ஈவு இரக்கமின்றி தடியால் அடித்த போலீசார் - வைரலாகும் வீடியோ..!
பீகாரில் அப்பாவி தொழிலாளியை ஈவு இரக்கமின்றி போலீசார் தடியால் அடித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அப்பாவியை தடியால் அடித்த போலீசார்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பீகார் காவல்துறையினர் சாலையில் நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பாவி தொழிலாளி ஒருவர் ரிக்ஷா சைக்கிளில் வந்துக்கொண்டிருந்தார்.
அவரை ஒவ்வொரு போலீசாரும் தடியால் அடித்து அனுப்பினர். இச்சம்பவத்தை காரில் இருந்தவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் பீகார் போலீசாரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
We are in 21st century. Is dis the kind of image #Biharpolice wants to portray? All hard work being done in Bihar,for #Bihar gets washed off, If a poor Thela wala can be attacked mindlessly like this dn can we really claim for a better Bihar.I am disturbed n angry @yadavtejashwi pic.twitter.com/pJEbDolfsN
— Nitu Chandra Srivastava (@nituchandra) November 29, 2022