திருட்டு குற்றச்சாட்டில் 2 இளைஞர்களை கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கிய நபர் - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
பீகாரில் திருட்டு குற்றச்சாட்டில் 2 இளைஞர்களை கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூரமாக தாக்குதல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பீகார் மாநிலத்தில், முசாபர்பூர், அஹியாபூரில் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் 2 இளைஞர்கள் கம்பத்தில் கை, கால்களை கட்டிப்போட்டு, இரும்பு கம்பிகள் மற்றும் செங்கற்களால் கொடூரமாக தாக்குகின்றனர். அடி வலி தாங்க முடியாமல் திருடன் ஒருவன் அலறி துடிதுடித்து கத்துகிறான்.
இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
ஈவு இரக்கமின்றி நபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் செயல் காண்போர் நெஞ்சை பதற வைக்கிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்பட்டவர்கள் மீது பீகார் மாநில போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வீடியோ வைரலானதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.