நண்பனின் காதலியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் - வீடியோ வெளியீடு!! அதிர்ச்சி சம்பவம்!!

arrest bihar abuse case
By Anupriyamkumaresan Jul 16, 2021 10:58 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

 பீகாரில் காதலனின் நண்பர்களால் கெடுக்கப்பட்ட பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் அபிஷேக் சர்மா என்ற வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதான பெண்ணை காதலித்தார்.

நண்பனின் காதலியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் - வீடியோ வெளியீடு!! அதிர்ச்சி சம்பவம்!! | Bihar Abuse Lover And Freinds Arrest

அப்போது இருவரும் யாருக்கும் தெரியாமல் உல்லாசமாக இருந்துள்ளார்கள். அப்போது அவரது நண்பர்கள் நிதேஷ் துபே, திப்பு துபே, லால்ஜி சர்மா மற்றும் லாலு தாக்கூர் ஆகியோர் இதனை மறைந்து நின்று வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை இணையத்தில் கசிய விடுவதாக மிரட்டி, அவ்வபோது அந்த பெண்ணை அபிஷேக்கின் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அபிஷேக் அந்த பெண்ணை பார்ப்பதை தவிர்த்து வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், சில நாட்களில் அவரின் காதலை மறந்து சுதந்திரமாக திரிந்துள்ளார்.

நண்பனின் காதலியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் - வீடியோ வெளியீடு!! அதிர்ச்சி சம்பவம்!! | Bihar Abuse Lover And Freinds Arrest

தற்போது அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த ஆபாச வீடியோவை, யாரோ இணையத்தில் கசித்துள்ளனர். இந்த வீடியோ காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து அந்த பெண்ணின் திருமணத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அபிஷேக் மற்றும் அவர்கள் நண்பர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.