“பல்லை ஒடச்சிருவேன் ராஸ்கல்” - நிரூப், வனிதா சண்டையால் பரபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப், வனிதா சண்டையால் இன்றைய எபிசோட் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து ஓடிடி தளத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி 24 மணி நேரமும் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வாரூணி ஆகியோர் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த வாரம் நிகழ்ந்த டபுள் எவிக்ஷன் முறையில் ஷாரிக், அபிநய் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் படப்பிடிப்பு இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகவும், சர்ச்சைகள் மிகுந்ததாகவும் மாற்ற ஏஞ்சல்ஸ் vs டெமன்ஸ் டாஸ்க் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் நிரூப் மற்றும் வனிதா இடையே தற்போது பெரிய சண்டை வெடித்துள்ளது. பாலாஜி அணி டெமனாகவும் நிரூப் அணி ஏஞ்சல்ஸாகவும் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை தொடங்கியுள்ளனர்.
விரைவில் அப்படியே அவர்கள் ஏஞ்சலாகவும், இவர்கள் டெமனாகவும் மாறுவார்கள். இந்நிலையில் விளையாடாமல் எப்படி விளையாடுவது என்கிற கேமை ஆடிவரும் வனிதாவை விளையாட சொல்லி நிரூப் கலாய்க்க இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் பல்லை தட்டி கையில் கொடுத்துடுவேன் என்றும் பல்லை ஒடைச்சிடுவேன் ராஸ்கல் என்றும் கோபத்தின் உச்சிக்கே சென்று வனிதா விஜயகுமார் பேச சக போட்டியாளர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கின்றனர்.