சுட்டி குழந்தைகளாக மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவருக்கும் பள்ளி பருவ டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ள ப்ரோமோ வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்சியமாக்க புதிய புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் ஒருயொருவரை குற்றச்சாட்டி சண்டைப் போட்டு வருகின்றனர். இப்படி பிக்பாஸ் வீடு களவரமாகி இருந்த நிலையில் ஜாலியான புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் புதிய டாஸ்க் குறித்து ராஜூ விளக்கமளிக்கிறார். அதில், நம் நினைவால் மறக்கமுடியாக விஷயம் பள்ளிப்பருவம். அதை மையப்படுத்திதான் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்க்கின் பெயர் கனா காணும் காலங்கள் என்று வைக்கப்பட்டுள்ளது. அதனால் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி பருவ இளமை துள்ளலுடன் உடையணிந்து காணப்படுகின்றனர்.
பள்ளிக்கூடத்தில் எப்படி இருக்குமோ, அப்படியே அனைவரும் இருக்கின்றனர். ராஜூ வாத்தியாராக செயல்பட்டு தாமரையை கேள்வி கேட்கிறார். இது குறித்து ப்ரோமோதான் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை உற்சாகமாக்கியுள்ளது.
#Day51 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/dWhjIKTY7S
— Vijay Television (@vijaytelevision) November 23, 2021