‘பெரிய Channel-ல என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா...’ - பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட பகீர் தகவல்

big channel member Abhirami told misbehaving to her
By Nandhini Jan 24, 2022 10:46 AM GMT
Report

மிகப்பெரிய சேனலில் பிக்பாஸ் அபிராமி தொப்பளாராக பணியாற்றிய போது, அங்குள்ள முக்கியஸ்தர் ஒருவர் தன்னிடம் தவறாக பேசி மிசிபிகேவ் செய்ததாக பகீர் தகவல் வெளிப்படுத்தியுள்ளார்.

பல விளம்பரங்களில் தோன்றி, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அபிராமி. இவர் பல பேஷன் ஷோ மற்றும் மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தி வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமான முதல் ஓரிரு நாட்களிலேயே கவினை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார் அபிராமி பிறகு, முகேன் மீது காதலோடு இருப்பதாக இவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், இவர் நடித்த முதல் படமான 'நேர்கொண்ட பார்வைக்கு' நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும், அடுத்தடுத்த பட வாய்ப்புக்கள் கிடைக்காமல் தற்போது வரை திண்டாடி வருகிறார் அபிராமி. எப்படியாவது பட வாய்ப்பை பெற வேண்டும் என்ற முயற்சியில், தீவிரமாக செயல்பட்டு வருகிறார் அபிராமி.

முன்பை விட உடல் எடையை ஏற்றி, விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார் அபிராமி. இந்நிலையில், சமீபத்தில் பரதநாட்டியதற்கான டாக்ட்ரேட் பட்டத்தை பெற்ற அபிராமி, சமீபத்தில் தனது அம்மாவுடன் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில்.

மிகப்பெரிய சேனலில் அபிராமி தொப்பளாராக பணியாற்றிய போது, அங்குள்ள முக்கியஸ்தர் ஒருவர் தன்னிடம் தவறாக பேசி மிசிபிகேவ் செய்ததாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.