பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவருக்கு எவ்வளவு சம்பளம்ன்னு தெரியுமா?
விஜய் டிவியில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ராஜூ ஜெயமோகன் வெற்றியாளரானார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்து வருபவர்தான் சாஷோ. இவர் பிக்பாஸ் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளுக்கும், எந்த தொடருக்கும் இதுவரை குரல் கொடுத்தது கிடையாது.
இவருடைய மாத சம்பளம் ரூபாய் 5 லட்சமாகும். இதுவரை ஒளிபரப்பாகியுள்ள 5 சீசன்களுக்கும் சாஷோதான் குரலாக ஒலித்து வருகிறார். தற்போது, பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணிநேரமும் நேரடி ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.
இந்த முறையும், பிக்பாஸ் அல்டிமேட் தொடருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்த சாஷோதான் பிக்பாஸ் வீட்டின் குரலாக ஒலிக்க உள்ளார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக சாஷோவிற்கு கூடுதல் சம்பளம் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜூலி, அபிராமி ஆகியோர் களமிறங்கியிருப்பதால் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.