“நான் என்ன தப்பு பண்றேன்...” - பிக்பாஸிடம் தேம்பி, தேம்பி கதறி அழுத வனிதா - நடந்தது என்ன?

contestants vanitha crying today promo big boss ultimate hot star
By Nandhini Feb 14, 2022 06:57 AM GMT
Report

பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு, பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில் சினேகன், ஜூலி, சுஜா வருணியும், ஷாரிக், தாடி பாலாஜி, அபிராமி, வனிதா, அனிதா, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தியும், நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

இதனையடுத்து, முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, நேற்று சுஜா வருணி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். 

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில் பிக்பாஸிடம் வனிதா கதறி அழுகிறார். நான் என்ன தப்பு பண்றேன்.. நான் யாரை ஏமாற்றுறேன் என்று அழுகிறார். 

இதோ அந்த ப்ரொமோ -