பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரை யாரை பார்த்தார்ன்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் ஆச்சரியம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான். நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார்.
இறுதிப்போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தாமரைச் செல்வி, குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
106 நாட்கள் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு, திரும்பவும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தாமரைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது.
பாலா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டைட்டில் வின்னரானார். தாமரை 3ம் இடத்தை பிடித்தார். தாமரை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே, தனது மாமியாரை பற்றி பெருமையாக பேசிக் கொண்டு இருப்பார்.
தனது குடும்பம், கலை இரண்டுமே இரண்டு கண்கள் மாதிரி என்று தாமரை அடிக்கடி கூறிக்கொண்டு இருப்பார்.
இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முடித்த கையோடு தனது மாமியாரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார் தாமரை.
தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு அழகான மாமாமியார், மருமகளா என்று புகழ்ந்து வருகின்றனர்.