‘கமல் விலகியதற்கு இதுதாங்க காரணம்... வேற ஒன்னுமே இல்ல...’ - பட்டுன்னு போட்டுடைத்த வனிதா
பிக்பாஸ் அல்டிமேல் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களிலும் கலந்து கொண்டவர்கள், மறுபடியும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், சிநேகன், வனிதா, ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலா, தாடி பாலாஜி, ஷாரிக், தாமரை செல்வி, நிரூப், சுருதி, அபிநய் என, மொத்தம் 15 போட்டியாளர்கள் களம் இறங்கினார்கள்.
முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியும், 2ம் வாரத்தில் சுஜாவும், 3ம் வாரத்தில் அபிநய் மற்றும் ஷாரிக்கும் வெளியேறினார்கள். இதனையடுத்து உடல்நிலை காரணமாக திடீரென்று வனிதா இந்தப் போட்டியிலிருந்து விலகிவிட்டார்.
பிக்பாஸ் 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து தன்னுடைய தனிப்பட்ட விஷயத்திற்காக திடீரென்று விலகினார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த வனிதா, நடிகர் கமல் ஏன் திடீரென்று விலகினார் என்பதை பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார்.
வனிதா பேசியதாவது -
கமல் சாருக்கு அதிகபட்சம் 3 அல்லது 4 நாட்கள்தான் ஷூட்டிங் இருக்கும். ‘விக்ரம்’ படத்தின் தயாரிப்பாளரே அவர்தான். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை.
இதனால்தான், பிக்பாஸ் 6 சீசனில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால், அவர் விலகுவதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது. நிகழ்ச்சி தவறான பாதையில் செல்கிறது அவர் புரிந்துகொண்டுள்ளார்.
அதனால்தான் அவர் கிளம்பிவிட்டார். நிகழ்ச்சியை தவறாக கொண்டு செல்வதை நாங்களே பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது உணர்ந்தோம். பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே அதனை நாங்கள் பேசிக்கொண்டோம்.
இந்த நிகழ்ச்சி செல்லும் விதமே சரியில்லை என்று. நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டேன். அதனால்தான் நான் வெளியேறிவிட்டேன்"
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு முன்னதாக, கமல் விலகியதுக்கு ஹாட்ஸ்டார் கொடுத்த அழுத்தமும் காரணம் என்ற தகவல் வெளியாகிக்கொண்டிருந்தது. கமல் தயாரிக்கும் ‘விக்ரம்’ படத்தையும் ஹாஸ் ஸ்டார்தான் அதிக விலைக்கு கொடுத்து வாங்க இருக்கிறது.
அதற்கான ஒப்பந்தமும் முடிந்துள்ளது. இதனால்தான் படத்தை தாமதம் செய்யாமல் உடனடியாக முடித்துக் கொடுக்கும்படி கமலுக்கு ஹாட் ஸ்டார் அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் உடனடியாக கமல் படம் பக்கம் கவனத்தை செலுத்த விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. திருப்பியதாகவும் தகவல் வெளியானது.