ஜூலி மேல் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சினேகன் - பழிக்கு பழி - எச்சரித்த பிக்பாஸ் - அதிர்ச்சி ப்ரொமோ

big-boss-ultimate contestants-fight பிக்பாஸ் அல்டிமேட் சினேகன் ஜூலி போட்டியாளர்கள் சண்டை
By Nandhini Feb 27, 2022 10:26 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி சண்டைக்கும், சச்சரவிற்கும் குறைவே இல்லை.

14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, தொடங்கிய முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியும், 2-வது வாரத்தில் சுஜாவும், 3ம் வாரத்தில் அபினஸ் மற்றும் ஷாரிக்கும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார்கள்.

ரசிகர்கள் எதிர்பார்க்காத வண்ணம், வனிதா சில காரணங்கள் அதிரடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று கூறி சென்று விட்டார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தன்னுடைய தனிப்பட்ட வேலை காரணமாக தற்காலிகமாக விலகியுள்ளார். இவருக்கு பதிலாக தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருக்கிறார். 

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. 

அந்த ப்ரொமோவில், ஜூலியை கைகளை கட்டி, முகத்தில் துணி வைத்து மறைத்து உச்சி வெயிலில் உட்கார வைத்துள்ளனர். அப்போது, அண்ணா... தண்ணீர் எடுத்து வர்றீங்களா.. என்று ஜூலி கேட்க, சினேகன் வெந்நீரை ஜூலி மேல் ஊற்றிவிட்டார். 

துடிதுடித்த ஜூலி... அண்ணா தண்ணீர் கொதிக்கிறது என்று அலறுகிறார்... உடனே, பிக்பாஸ் இப்படி செய்யாதீர்கள் சினேகன்.. முதலில் ஜூலியின் முகத்தில் இருக்கும் துணியை கழற்றுங்கள் என்று எச்சரித்த தோணியில் கூறுகிறார். 

உடனே... சினேகன்.. சரி பிக்பாஸ்.. எனக்கு தெரியவில்லை என்று கூறுகிறார். 

தற்போது இந்த ப்ரொமோவைப் பார்த்த நெட்டிசன்கள், அது எப்படி வெந்நீர் தெரியாமல் இருக்கும்.. ஜூலி பாவம்... சினேகன் ஜூலியை பழிக்கு பழி வாங்கி இருக்கிறார் என்று தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.