கேம் விளையாட வந்தீங்களா... ஆக்கி தின்ன வந்தீங்களா... - வனிதாவிடம் சீறிய பாலா
பிக்பாஸ் 5வது சீசன் முடிவடைந்து இரண்டு வாரங்கள் கூட முடியாத நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் தொடங்கியது.
இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 24*7 என லைவ் ஸ்ட்ரீமிங்காக நிகழ்ச்சிக்கு எந்த ஒரு தணிக்கையும் இல்லாமல், 24 மணிநேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் சிநேகன், வனிதா, ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலா, தாடி பாலாஜி, ஷாரிக், தாமரை செல்வி, நிரூப், சுருதி, அபிநய் என 15 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
சண்டைக்கு அளவே இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது இந்நிகழ்ச்சி. முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியும், 2-வது வாரத்தில் சுஜா வருணியும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
இந்நிலையில் இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது.
அந்த ப்ரொமோவில்,
வனிதாவிற்கும், பாலாஜிற்கும் கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. அப்போது, பாலாஜி வனிதாவை பார்த்து... கேம் விளையாட வந்தீங்களா.. இல்ல நல்லா ஆக்கி தின்ன வந்தீங்களா என்று கேட்கிறார்.