ரக்ஷிதா மேல இருக்கிறது கிரஷ்தான்... அது வேற... இது வேற... - ராபர்ட் கொடுத்த விளக்கம் - ஷாக்கான ரசிகர்கள்

Bigg Boss
By Nandhini Dec 01, 2022 10:26 AM GMT
Report

ரக்ஷிதா மேல இருக்கிறது கிரஷ்தான். அது வேற... இது வேற... என்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ராபர்ட் விளக்கம் கொடுத்துள்ளார்.

ரக்ஷிதாவிடம் அத்துமீறிய ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலிருந்து ராபர் மாஸ்டர் ரக்ஷிதாவை துரத்தி துரத்தி வரும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. பலமுறை ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். 

நேருக்கு நேராக வெச்சு விளாசிய ரக்ஷிதா

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடந்தது. அப்போது, போட்டியாளர்கள் லிவிங் ஏரியாவில் பிளாஸ்மா முன்பு அமர்ந்து நேருக்கு நேராக நாமினேஷன் செய்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராதவாறு ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்தார் ரக்ஷிதா. ராபர்ட் விளையாடும் மன நிலையில் இல்லை என்ற அவர் இந்த வாரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் விளையாட வேண்டும், இல்லாவிட்டால் வெளியேற வேண்டும் என்று தடாலடியாக கூறினார்.

இதைக் கேட்டவுடன் ராபர்ட் மாஸ்டர் முகம் வாடிவிட்டது. ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்ததை பார்த்த ரசிகர்கள்... செம்ம... சூப்பர்மா என அவரை கொண்டாடினர். இதனையடுத்து, கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ராபர்ட் வெளியேற்றப்பட்டார்.

big-boss-robert-master-rakshita

மனம் திறந்த ராபர்ட்

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள ராபர்ட் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். 

அந்த பேட்டியில். ரக்ஷிதா மீது எனக்கு இருப்பது கிரஷ்தான். அது உண்மை தான். அது வெறும் கிரஸ். அது வேற, காதல் வேற. எனக்கு வெளிய லவ்வர் இருக்காங்க. என் மேல இருந்த கோபத்தால மோதிரத்தை கொடுத்து அனுப்பி இருக்கலாம்.

ஆனா வெளிய வந்து பேசுன பிறகு அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. அவுங்களுக்கும் ஒரு கிரஸ் இருக்கு. நானும் அவர்க்கிட்ட பேசி உள்ளேன். அதே மாதிரி ரக்ஷிதா மேலயும் எனக்கு ஒரு கிரஸ் இருந்தது. அவ்வளவு தான். ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டில் இன்னமும் அவரது முழு சுயரூபத்தை வெளியே காட்டவில்லை என்றார். ராபர்ட் மாஸ்டர் அளித்துள்ள பேட்டி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.