நான் வீட்டிற்கு போகிறேன்... என்னை விட்டுவிடுங்கள்... - கூச்சல் போட்டு கதறி அழுத ஜனனி...! - ரசிகர்கள் சோகம்
நான் வீட்டிற்கு போகிறேன்... என்னை விட்டுவிடுங்கள்... என்று பிக்பாஸ் வீட்டில் கூச்சல் போட்டு இலங்கைப் பெண் ஜனனி கதறி அழுதுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
குயின்ஸியின் காலில் விழுந்த ஜனனி
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் ஒரு அவசர நேரத்தில் ஜனனி தெரியாமல் குயின்சின் டவலை எடுத்து பயன்படுத்தினார். இதைப் பார்த்த குயின்ஸி பயங்கரமாக டென்ஷனார். யாரும் என் டவலை எடுத்து பயன்படுத்துவது எனக்கு சுத்தமா பிடிக்காது.
என் வீட்டில் என் அப்பா, தம்பி யாராச்சும் என் டவலை எடுத்து பயன்படுத்தினால் எனக்கு கோபம் வரும் என்று கூற, உடனே ஜனனி ஓடி வந்து குயின்ஸியை சமாதானப்படுத்தினார்.
உங்களது என்று எனக்கு தெரியாது. தெரியாமல் எடுத்து பயன்படுத்திவிட்டேன் கூற, விடாமல் குயின்ஸி கோபப்பட்டுக்கொண்டே இருந்தார். இதனால் மனமுடைந்த ஜனனி குயின்ஸியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். மனம் கலங்கிய ஜனனி தனிமையில் அவமானத்தால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்.
கூச்சல் போட்டு கதறி அழுத ஜனனி
இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில் இலங்கைப் பெண் ஜனனி கதறி அழுகிறார்.
கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்து வந்த ஜனனியிடம் போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்து வருகிறார்கள். இதனால் மனமுடைந்துள்ள ஜனனி இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல் கலக்கத்தில் இருந்து வருகிறார்.
இன்று விக்ரமும், அமுதவானனும் ஜனனியிடம் ஏதோ வாக்குவாதம் செய்ய, இதனால் மனமுடைந்த ஜனனி கத்தி கூச்சல் போட்டு கதறி அழுகிறார்.
நான் இங்கே இருக்க மாட்டேன்.. நான் வீட்டிற்கு போகிறேன்.. என்னிடம் யாரும் வாக்குவாதம் செய்யாதீங்க என்று குழந்தைப் போல் அழுகிறாள். இவள் அழுவதைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத போட்டியாளர்கள் ஓடி வந்து ஜனனியை கட்டிப்பிடித்து அவளை தேற்றுக்கிறார்கள்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜனனி அழுவதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அச்சோ... ஜனனி நீ அழாதம்மா... நீ அழுதா மனம் வலிக்குது... என்று சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.