உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே : பாராலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்த பவினா!

paralympics Table Tennis bhavinabenpatel
By Irumporai Aug 27, 2021 01:03 PM GMT
Report

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸில் அரையிறுதிக்கு நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்தியாவின் பவினா படேல். டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவில் காலிறுதிப் போட்டியில் பவினா பட்டேல் செர்பியா நாட்டின் பெரிக் ரென்கோவிக்கை எதிர்த்து விளையாடினார்.

இந்தப் போட்டியை 11-5,11-6,11-7 என்ற கணக்கில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த செர்பிய வீராங்கனையை தோற்கடித்தார். அத்துடன் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

மேலும் 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் கிளாஸ் 4 பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் சாம்பியனான பெரிக் ரென்கோவிக்கை வீழ்த்தி பெரும் சாதனையை படைத்துள்ளார்.

மேலும் இந்தியாவிற்கு டோக்கியோ பாராலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இதன் மூலம் பாராலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனையை தன்னுடைய முதல் பாராலிம்பிக்கில் படைத்து அசத்தியுள்ளார்.