மீண்டும் இந்திய ஒற்றுமை பயணம் 2.0 - களத்தில் இறங்கிய ராகுல் காந்தி..!
அடுத்தகட்ட ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் துவங்கி மேகாலயா வரை மேற்கொள்ளவுள்ளார் என காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமை பயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார் . அதனை தொடர்நது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மீண்டும் நடைபயணம் துவங்கும் ராகுல் காந்தி
இந்நிலையில் தற்போது மீண்டும் எம்.பியாகி இருக்கும் அவர் தனது ஒற்றுமை பயணத்தின் அடுத்தக்கட்ட நடைபயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் வரை சென்ற அவர் தற்போது குஜராத் முதல் மேகாலயா வரை குறுக்குவெட்டு வழியில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது இந்த தகவலை அவர் தெரிவித்திருக்கிறார்.