நிறுவனத்துடன் நீண்ட காலமாக பயணிக்கும் ஊழியர்களுக்கு கார் பரிசளித்து அசத்திய ஐடி நிறுவனம்..!
சென்னையில் செயல்படும் தனியார் ஐடி நிறுவனம் தன் நிறுவனத்தில் பணி செய்யும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசளித்து அசத்தியுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Ideas 2 IT நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் இருந்து தன் நிறுவனத்தில் பணி செய்து வரும் 100 ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு 100 கார்களை பரிசாக அளித்து கவுரவப்படுத்தியுள்ளது.
தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் நிறுவனத்திற்கு வந்த லாபத்தை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும் விதமாக ஊழியர்களுக்கு விலை உயர்ந்த கார்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து நிறுவனத்தின் தலைவர் முரளி விவேகனந்தன் கூறுகையில் "அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் பணியாற்றிய 100 ஊழியர்களுக்கு 100 கார்களை வழங்கிய முதல் IT கம்பெணி என்பதில் பெருமை கொள்கிறோம் என கூறினார்.
ஊழியர்களை குடும்பங்களுடன் வரவழைத்து கார்களை வழங்கி கவுரவப்படுத்தியது நிறுவனம்.
இதனால் ஊழியர்கள் கடும் மகிழ்ச்சியில் கார்களை தங்கள் குடும்பத்தினரை அமரவைத்து ஓட்டிச் சென்றனர்.