மிக ஆபத்தான இடத்தை நோக்கி பயணிக்கும் கப்பல் : கப்பல் காணாமல் போனால்... ஆஃபர் அறிவித்த நிர்வாகம்
உலகிலேயே ஆபத்தான இடங்களில் ஒன்றாக கருதப்படும் பெர்முடா முக்கோண பகுதிக்கு செல்ல இருக்கிறது ஒரு சொகுசு கப்பல். அந்த நிர்வாகம் பயணிகளுக்கு அளித்துள்ள ஆஃபர் பற்றித்தான் தற்போது பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.
அட்லான்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் உள்ள பெர்முடா தீவு, போர்ட்டோ ரிக்கா தீவுகள் மற்றும் ஃப்ளோரிடா நீரிணை ஆகிய மூன்றையும் இணைக்கும் முக்கோண வடிவிலான கடல் பரப்பு Bermuda Triangle எனப்படுகிறது. சிலர் மெக்சிகோ வளைகுடாவையும் இந்த பரப்பினுள் இணைத்து கணக்கிடுகின்றனர்.
இப்படி பூலோக சர்ச்சைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்தப் பகுதி பல்வேறு மர்மங்களை தன்னிடத்தே கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரபல சொகுசு கப்பலான நார்வேயின் பிரைமா (Norwegian Prima) அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கிளம்பி பெர்முடா செல்ல இருக்கிறது.
இதில் பயணிக்க இருப்பவர்களுக்கு விசேஷ ஆஃபர் ஒன்றையும் அந்த நிறுவனம் அளிக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் தனது இணையதளத்தில்,"ஒருவேளை கப்பல் பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல்போனால் முழு கட்டண தொகையும் திருப்பியளிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளது
இந்நிலையில், பிரபல சொகுசு கப்பலான நார்வேயின் பிரைமா (Norwegian Prima) அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கிளம்பி பெர்முடா செல்ல இருக்கிறது.
இதில் பயணிக்க இருப்பவர்களுக்கு விசேஷ ஆஃபர் ஒன்றையும் அந்த நிறுவனம் அளிக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் தனது இணையதளத்தில்,"ஒருவேளை கப்பல் பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல்போனால் முழு கட்டண தொகையும் திருப்பியளிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளது
இதே கப்பலில் முன்னாள் ராணுவ ஆலோசகர்கள் சிலரும் பயணிக்க இருப்பதாகவும், அவர்கள் பெர்முடா முக்கோணத்தின் அருகே சிறிய படகில் மக்களை அழைத்துச் சென்று அப்பகுதி குறித்து சொல்லக்கூடிய வதந்திகள் குறித்து விளக்கம் அளிக்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பெர்முடா முக்கோண பகுதியில் திசைகாட்டிகள் சரியாக வேலை செய்யாத காரணத்தினால் விமானங்கள் விபத்தை சந்தித்திருப்பதாக கூறுகிறது அமெரிக்க ராணுவம். அதாவது பூமியில் சில இடங்களில் காந்தப்புல வித்தியாசங்கள் இருக்கும்.
இதனால் திசைகாட்டிகள் சரியாக இயங்காமல் போவதுண்டு. அப்படி பெர்முடா பகுதியிலும் நடப்பதால் இந்த விபத்துகள் நடப்பதாக சொல்கிறார்கள் நிபுணர்கள். மேலும், பெர்முடா கடல் பரப்புக்கு அடியே 'தி கல்ஃப் ஸ்ட்ரீம்' எனப்படும் பெருங்கடல் நீரோட்டம் அமைந்துள்ளது.
இதனால் இந்தப் பகுதியில் விபத்தை சந்தித்த விமானங்கள் மற்றும் கப்பல்களின் பாகங்கள் இந்த நீராட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர் புவியியலாளர்கள்.