Rapido புக் செய்த இளம்பெண்..நண்பருடன் பாலியல் வன்கொடுமை செய்த ட்ரைவர்!

Sexual harassment Kerala Bengaluru Crime
By Sumathi Nov 30, 2022 11:42 AM GMT
Report

பெண் ஒருவர் ராபிடோ ட்ரைவர் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராபிடோ

கேரளவைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் பெங்களூரில் ரேபிடோ சவாரிக்கு முன்பதிவு செய்துள்ளார். இதற்கிடையில் அவர் நண்பர்கள் வீட்டில் நிகழ்ச்சியில் மது அருந்தியுள்ளார். தொடர்ந்து, பைக்கின் ட்ரைவராக சகாபுதீன்(26) என்பவர் வந்துள்ளார்.

Rapido புக் செய்த இளம்பெண்..நண்பருடன் பாலியல் வன்கொடுமை செய்த ட்ரைவர்! | Bengaluru Girl Gangraped By Rapido Driver

அந்தப் பெண்னை ஏற்றிக்கொண்டு அழைத்துச் சென்றபோது அவர் மதுபோதையில் இருந்ததை அறிந்துள்ளார். மேலும், அவர் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்தி ட்ரைவர் அவர் வீட்டிற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.

பாலியல் வன்கொடுமை 

அங்கு அவரின் காதலியும் இருந்துள்ளார். அதனையடுத்து ட்ரைவர் அவரது நண்பர் அக்தரை வரவழைத்து அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பின் காலையில் அந்தப்பெண் எழுந்து கேட்கும்போது

அவர் மதுபோதையில் இருந்ததால் அவர் வீட்டிற்கு அழைத்து வந்து பாத்துக்கொண்டதாக ட்ரைவரும் அவரது காதலியும் கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்தப் பெண் வீட்டிற்கு சென்ற நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. உடனடியாக போலீஸாரிடம் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், ட்ரைவர், அவரது காதலி மற்றும் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.