நானும் பீஃப் சாப்பிடுறவன்தான் : பிரியாணி சர்ச்சை விளக்கம் கொடுத்த அமைச்சர்

Tamil nadu Ma. Subramanian
By Irumporai Aug 12, 2022 11:07 AM GMT
Report

சென்னை உணவு திருவிழாவில், பீப் அரங்கு அமைக்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

உணவுத் திருவிழா

சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவானது, 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த உணவு திருவிழாவை அமைச்சர் நா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நானும் பீஃப் சாப்பிடுறவன்தான் : பிரியாணி சர்ச்சை விளக்கம் கொடுத்த அமைச்சர் | Beef Biryani Minister M Subramanian

நானும் பீப் சாப்பிடுவேன்

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம், சிக்கன் மட்டன் பிரியாணிக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது ஆனால், பீஃப் பிரியாணிக்கு அரங்கு இல்லையே ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், நானும் பீஃப் சாப்பிடுபவன் தான். ஆனால் இங்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் பீப் அரங்கு அமைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.