பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார் கரோலினா பைலாவ்ஸ்கா - குவியும் பாராட்டு
2021ம் ஆண்டிற்கான உலக அழகி மகுடத்தை போலாந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா சூடியுள்ளார்.
அமெரிக்கா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, வட அயர்லாந்து மற்றும் கோட்டே டி ஐவரி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அழகிகளை பின்னுக்குத் தள்ளி கரோலினா பைலாவ்ஸ்கா வெற்றிப் பெற்றுள்ளார்.
அதே நேரத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனி முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியா சார்பாக உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஃபெமினா மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்ற மானசா வாரணாசி இப்போட்டியில் 13வது இடத்தை பெற்றார்.
ஆனால், மானசா இந்தியாவின் வாரணாசியை பிரதிநிதித்துவப்படுத்தியபோது, சேனி அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
மிஸ் வேர்ல்ட் 2021ல் ஸ்ரீ சேனி முதல் 6 இடங்களை அடைய முடிந்தது. மான்சா வாரணாசி முதல் 13 இடங்களை அடைந்த பிறகு வெளியேறினார். முதல் 6 இடங்கள் கூட வராமல் அவர் தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், புதிய உலக அழகியாக தேர்வாகி உள்ள போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்காவுக்கு சர்வதேச ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
அடுத்த உலக அழகிப் போட்டி 2022 இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Our newly crowned Miss World Karolina Bielawska from Poland with 1st Runner Up Shree Saini from United States 2nd Runner up Olivia Yace from Côte d’Ivoire#missworld pic.twitter.com/FFskxtk0KO
— Miss World (@MissWorldLtd) March 17, 2022