ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு; 176 பேர் பலி - உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்!
வங்காளதேசத்தில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
டெங்கு பாதிப்பு
வங்காளதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,292 பேருக்கு டெங்கு பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மொத்த நோயாளிகளில் 1064 பேர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மீதி பேர் வேறு மருத்டுவமணியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் டெங்கு பாதிப்பினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு 176 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை 7,175 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் வங்கதேசத்தில் 32,977 பேர் பாதிக்கப்பட்டும் அதில் 25,626 பேர் குணமடைந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த 2019 ஆம் ஆண்டு 179 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். 2022ஆம் ஆண்டு 281 பேர் உயிரிழந்தனர். ஆனால் நடப்பு ஆண்டில் பாதிப்பு மோசமாக மாறியுள்ளது. கடந்த 21 நாட்களில் மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.
வருகிற ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று வங்காளதேசத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் செய்தி வெளியிட்டுள்ளது.