ஆஸ்திரேலியாவுக்கு அடிமேல் அடி... தொடரை கைப்பற்றி வங்கதேசம் அசத்தல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் வங்கதேச அணி 23 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இதனிடையே இன்று 3வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கியவர்களில் முகமதுல்லா 52 ரன்கள் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லீஸ் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 128 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் 51 ரன்கள் எடுத்தப்போதிலும் 20 ஓவர்களில் அந்த அணியால் 4 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.