நீங்கள் யூடியூப் சேனல் தொடங்க கூடாது - தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு
இந்த யூடியூப் சேனல் மூலம் இன்று படிக்கும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் சம்பாதித்து வருகின்றனர்.
அதிகம் உருவாகும் யூடியூப் சேனல்கள்
சொற்ப இலக்கங்களில் இருந்து வந்த யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பம் வளர வளர இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலனோர் செல்போன்களே பயன்படுத்தாமல் இருப்பதில்லை அதிலும் இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் அரசு அலுவலகங்களில் பணியாற்றக் கூடியவர்களில் வேலை நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
யூடியூப் சேனல்கள் தொடங்க தடை
இந்த நிலையில், கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல் தொடங்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில உள்துறையில் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், ஒரு அரசு ஊழியர்கள் youtube சேனலை தொடங்குவது கேரள மாநில அரசின் தொழிலாளர் சட்டம் 1960 ன் படி விதிமீறல் ஆகும். தற்போது பின்பற்றப்படும் விதிகள் youtube சேனல் தொடங்குவதற்கு அனுமதிக்காது என கூறப்பட்டுள்ளது.