தொடைய தட்டி - மீசைய முறுக்கி சவால் விட்ட பாலையா..சினிமாவை மிஞ்சிய ஆந்திர சட்டமன்றம்!!
தெலுங்கு நடிகரும், தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ'வான நந்தமூரி பாலகிருஷ்ணா இன்று ஆந்திர சட்டசபையில் செய்த செயல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
சந்திரபாபு நாயுடு
கைது ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு கைதான நிலையில், தொடர்ந்து அம்மாநில அரசியல் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றது, குறிப்பாக தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை கண்டித்து அவ்வப்போது கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நீட்சியாக நடைபெறவுள்ள ஆந்திர மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி தேர்தலை சேர்ந்து சந்திக்கும் என அதிரடியாக அறிவித்தனர்.
கலாட்டா செய்த பாலையா..!
இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் இன்று கூடிய ஆந்திர சட்டமன்றத்தில் தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அக்கட்சி நிர்வாகிகள் சபாநாயகர் நாற்காலியை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட நிலையில், நடிகரும் ஹிந்துபுர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நந்தமூரி பாலகிருஷ்ணா தனது தொடையை தட்டி, மீசையை முறுக்கி ஆளும் கட்சி நிர்வாகிகளை குறித்து கடுமையாக விமர்சித்தார்.
இந்த செயலுக்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், இந்த செயல்கள் எல்லாம் சினிமாவில் வைத்து கொள்ளலாம், இங்கே வேண்டாம் என்றும், தைரியம் இருந்தால் அருகில் வாருங்கள் என ஆந்திர மாநிலத்தின் சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம் அமைச்சர் அம்பட்டி ராம்பாபு எச்சரிக்கை செய்தார்.
#NandamuriBalakrishna Cheap Behaviour in AP Assembly!! pic.twitter.com/qwkaDpdfI9
— cinee worldd (@Cinee_Worldd) September 21, 2023