மீண்டும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் : வெளியே வரும் சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் ஜாமீன் கிடைத்த நிலையில் அவர் மீண்டும் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவுக்கு சங்கருக்கு ஜாமீன்
பிரபல அரசியல் விமர்சகரும் பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கருக்கு மதுரை ஐகோர்ட்டானது சிறை தண்டனை வித்தித்த நிலையில் , அவரது தண்டனையினை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
விடுதலை எப்போது
இந்த மனுவினை விசாரித்த உச்ச நீதி மன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. ஆகவே அவர் விடுதலையாவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.
இந்த 4 வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில் 4 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் விரைவில் விடுதலையாகலாம் என கூறப்படுகிறது.