பாஜக நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமி நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு
தந்தை பெரியார் குறித்தும், தமிழக முதலமைச்சர் குறித்தும் அவதுாறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு
கோவையில் தமிழக முதலமைச்சர் பற்றியும், தந்தை பெரியார் பற்றியும் அவதுாறக பேசியதற்காக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கலகத்தை துாண்டுதல், அவதுாறு பரப்புதல், உள்ளிட்ட 3 பிரிவுகளில் கிழும் , வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருடைய ஜாமீன் மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ராஜசேகர்.
நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
பாலாஜி உத்தம ராமசாமி 15 நாட்களுக்கு பீளமேடு காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.