இயக்குநர் செல்வமணிக்கு பிடிவாரண்ட் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016- ஆம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அருள் அன்பரசு தனியார் தொலைக்காட்சிக்கு சினிமா பைனான்சியர் போத்ரா குறித்து பேட்டி அளித்தனர்.
இதையடுத்து இவர்களுக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா சார்பில் அவதுாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போத்ராவின் மறைவுக்கு பிறகு இந்த வழக்கை அவரது மகன் நடத்தி வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செல்வமணி மற்றும் அருள் அன்பரசு தரப்பில் யாரும் ஆஜராகததால் ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டுள்ளது.
மேலும் வழக்கின் விசாரணையை வரும் 23 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்