மோசமாக நடந்து கொண்ட இயக்குநர் பாலா - அதிர்ச்சியில் திரையுலகம்

Bala
By Thahir Sep 14, 2022 05:06 PM GMT
Report

முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா அண்மையில் மோசமாக நடந்து கொண்ட சம்பவம் திரைவட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு கொடுத்த பாலா 

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் பாலா. இதன் படப்பிடிப்பு வேளைகள் மும்முராக நடந்த வருகிறது.

இதனிடையே பிதாமகன் திரைப்பட தயாரிப்பாளர் பாலா மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிதாமகன்.

மோசமாக நடந்து கொண்ட இயக்குநர் பாலா - அதிர்ச்சியில் திரையுலகம் | Badly Behaved Director Bala

இத்திரைப்படத்தை வி ஏ துரை தயாரித்திருந்தார்.நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை. இதனால் இயக்குநர் பாலா மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கி தருகிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.

திடீர் போராட்டம் 

இதனால் 10 லட்சம் ரூபாயை அட்வான்ஸாக வி.ஏ.துரை இயக்குநர் பாலாவுக்கு கொடுத்துள்ளார். ஆனால் 10 ஆண்டுகள் கடந்தும் பாலா அவருக்கு படத்தை இயக்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மோசமாக நடந்து கொண்ட இயக்குநர் பாலா - அதிர்ச்சியில் திரையுலகம் | Badly Behaved Director Bala

அதனால் முன் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டும் அவர் கொடுக்காமல் இருந்திருக்கிறார். இதனால் அந்த தயாரிப்பாளருக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

அதன் காரணமாகவே அவர் தற்போது பழங்குடி என்ற ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து தனது பணத்தை கேட்டு இயக்குநர் பாலா அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.அ்ப்போது பாலாவின் உதவியாளர் அவரை வெளியே துரத்தியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த வி.ஏ.துரை அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி அறிந்து வந்த போலீசார் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் வி.ஏ.துரையிடம் சமாதானம் பேசியுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் வி.ஏ.துரை.இச்சம்பவம் திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.