செல்லப்பிராணி நாய்க்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர் - வைரலாகும் வீடியோ

By Nandhini May 26, 2022 07:41 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கடலூர் அருகே வளர்ப்பு நாய்க்கு அதன் உரிமையாளர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். கடலுர், காரைக்காடு, மாரியம்மன் கோவிலில் வசிக்கும் ஜீவாசங்கர், ‘ராக்கி’ என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார். ராக்கி நாய் சமீபத்தில் கர்ப்பமானது.

இதனையடுத்து, தனது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்த முடிவெடுத்தார். தன்னுடைய நெருங்கிய உறவினர்களை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரவழைத்தார்.

தங்கசெயினை நாய் ராக்கிக்கு அணிவித்து, குங்குமம், மஞ்சள் பூசி வளைப்பு நடத்தி ஜீவாசங்கரின் உறவினர்கள் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.

தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.      

செல்லப்பிராணி நாய்க்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர் - வைரலாகும் வீடியோ | Baby Shower For Pet Dog