மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் கவ்வி சென்ற கொடூரம் - வெளியான அதிர்ச்சி காட்சி!
மருத்துவமனையிலிருந்து 6 மாத குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்விச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளம்
மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் பங்கால் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நவம்பர் 18 அன்று இரவு கர்ப்பிணிப் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கர்ப்பிணிப் பெண் கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.அப்போது திடீரென 6 மாத குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போது மயங்கி விழுந்துள்ளார். அந்த நேரத்தில் மருத்துவமனையில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று குழந்தையைக் கவ்விச் சென்றுள்ளது.
நீண்ட நேரம் ஆகியும் கர்ப்பிணி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கழிப்பறைக்குச் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். உதவிக்காக மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் பலமுறை அழைப்பு விடுத்துள்ளனர். அப்போது எந்த ஊழியர்களும் தங்களுக்கு உதவ வரவில்லை கூறப்படுகிறது.
நாய்
தற்பொழுது நாய் குழந்தையைக் கவ்விச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக பிஷ்ணுபூர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Brain Teaser Maths: எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு சொல்பவராயின் இதற்கு விடை கூற முடியுமா? Manithan
