மூன்று பேர் DNA களுடன் பிறந்த குழந்தை - இப்படியெல்லாம் நடக்குமா?
3 மரபணுக்களைக் கொண்டு ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 பேர் டிஎன்ஏ
இங்கிலாந்தில் தாய், தந்தையரைத் தவிர்த்து மூன்றாவது நபராக மற்றொரு பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா எனும் ஒரு அம்சத்தை மட்டும் நன்கொடையாகப் பெற்று குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் சட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.
இதன் அடிப்படையில், அங்கு 3 டிஎன்ஏ- களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இப்படி பிறக்கும் குழந்தைகள் அந்த 3 டிஎன்ஏக்களுடன் அடுத்த தலைமுறைக்கும் வழிவழியாக தங்களது ஒட்டுமொத்த பரம்பரைக்கும் கடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
அதிசய சம்பவம்
மைட்டோகாண்ட்ரியா என்பது ஒவ்வொரு செல்லிலும் உள்ள சிறிய பகுதி. தாயிடம் இருந்துதான் இந்த மைட்டோகாண்ட்ரியா குழந்தைக்கு கடத்தப்படுகிறது. இதனை சரியாகப் பெறாத குழந்தைகள் நோய்த் தாக்கம் ஏற்பட்டு பெரும்பாலான சமயங்களில் இறக்கும் நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற குறைப்பாட்டை தவிர்ப்பதற்காகவே தற்போது கருத்தரிப்பின்போது மூன்றாவது நபராக மற்றொரு பெண்ணின் கருமுட்டையில் இருந்து மைட்டோகாண்ட்ரியா நன்கொடையாகப் பெறப்பட்டு குழந்தை பிறக்க வைக்கப்படுகிறது. ஆனால், பிறக்கும் குழந்தையானது தாய் தந்தையரின் குணநலன் மற்றும் உடலமைப்பையே கொண்டிருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.