அடுத்தடுத்து வெடிக்கும் போர்; அன்றே கணித்த பாபா வாங்கா - இன்னும் என்னவெல்லாம் இருக்கு?
பாபா வாங்காவின் 2025ஆம் ஆண்டு கணிப்புகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அடுத்தடுத்து போர்
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.
இந்நிலையில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் உற்றுநோக்கப்படுகிறது. பெரிய மோதல்கள், சோகமான சம்பவங்கள், போர் சம்பவங்கள் நடைபெறும். அது மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். ஐரோப்பாவில் ஒரு பேரழிவுக்கான மோதல் ஏற்படும்.
பலிக்கும் கணிப்புகள்
இந்த மோதல் ஐரோப்பிய கண்டத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும். இதன்படி போர் பதற்றங்கள் உலகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும், 2028ல் புதிய வளங்களைத் தேடி மனிதர்கள் வீனஸை(Venus) அடைவார்கள்.
பின்னர் 2033-ல் மிகப்பெரிய பனிக்கட்டிகள் உருகும். இதனால் கடல் மட்டம் அதிகரிக்கும். பெரிய அலைகள் தாக்கி பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும். 2170ல் பருவநிலை மாற்றம் பூமியில் அழிவை ஏற்படுத்தும். பூமியில் வறட்சி அதிகரித்து மனித வாழ்க்கையை மோசமாக்கும்.
3005ஆம் ஆண்டு பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே போர் ஏற்படும். 3797ல் பூமியிலிருந்து உயிர்கள் பிரியும். இறுதியாக 5079ல் உலகம் அழிந்து மனித இனம் முற்றிலும் அழிந்துவிடும் என்று கணித்துள்ளார்.