பாக்கியலட்சுமி சீரியலில் திடீர் திருப்பம்...மாட்டிக்கொள்ளப்போகும் கோபி..என்ன நடந்தது?
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து நடக்க போகும் சம்பவங்கள் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இதன் நாயகன் கோபி குடும்பத்திற்காக மனைவியை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறான். அந்த சமயத்தில் கோபியை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் தகிடு தத்தங்கள் என திரைக்கதை சுவாரஸ்யமாக செல்கிறது.
இதில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். கதைப்படி ராதிகா - பாக்கியா நட்பை பிரித்து விட வேண்டும் என நினைக்கும் கோபி அடிக்கடி சந்திக்கவே கூடாது என்று பிளான் செய்து ராதிகா வீட்டை காலி செய்து தூரமாக குடி வைக்கிறார்.
ஆனால் பாக்கியா - ராதிகா நட்பு தொடர்ந்து கொண்டே செல்கிறது. கோபி பாக்கியாவை பற்றி என்ன சொன்னாலும் ராதிகா நம்ப மாட்டுகிறார்.மயூ பிறந்த நாள் அன்று பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம் அடைந்த நிலையில் இதன்மூலம் இருவரும் இனி பேசவே மாட்டார்கள் என கோபி தப்பு கணக்கு போட்டார். கடைசியில், பாக்கியாவுக்காக கோபியை பேச சொல்லி ராதிகா அதிர்ச்சியளித்தார்.
இந்நிலையில் அடுத்ததாக நடக்க போக்கும் தங்களது கல்யாணத்தை பாக்கியாவும் அவரின் குடும்பமும் தான் நடத்தி வைக்க வேண்டும் என ராதிகா கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் கோபி, பாக்கியா உண்மையிலேயே நமது மனைவி என தெரிந்தால் என்ன நடக்குமோ என தவிக்க அடுத்தடுத்து நடக்க போகும் சம்பவங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம் Manithan
