கோபி மீது சந்தேகப்படும் ராதிகா - பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கபோகும் ட்விஸ்ட்!

Serial Baakiyalakshmi Episode Gopi Radika
By Thahir Apr 14, 2022 03:26 AM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுக்கு முதன்முறையாக கோபி மீது சந்தேகமும் வந்து விட்டது. ஒரே நேரத்தில் 2 பெண்களையும் ஏமாற்றும் கோபி மொத்த குடும்பத்திடமும் மாட்ட போகும் நேரம் வந்துவிட்டது.

ஆம்,ராதிகாவுக்கும் கோபி மீது சந்தேகம் வர தொடங்கிவிட்டது.இந்நாள் வரை கோபி பற்றிய உண்மை தெரிந்தவர்கள் 2 பேர் மட்டுமே,

ஒன்று எழில் மற்றும் ராமமூர்த்தி தாத்தா இருவரும் குடும்ப அமைதிக்காக இந்த உண்மையை சொல்லாமல் மறைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அதற்குள் கோபியே கையும்,களவுமாக மாட்டிக் கொள்வார் போல இருக்கிறது சீரியலின் கதைக்களம்.

மயூவின் பிறந்த நாளுக்கு ராதிகா, டீச்சர் என்று அழைக்கும் பாக்கியாவிடம் தான் சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்து இருந்தார்.

அதே போல் அன்றைய தினம் பாக்கியா - கோபியை சந்திக்க வைக்க வேண்டும் என்றும் திட்டம் போட்டார். ஆனால் கோபி வழக்கம் போல் தில்லாங்கடி வேலை செய்து பாக்கியாவை வரவிடாமல் செய்தார்.

அப்படி இருந்தும் செகல்வி அக்கா அந்த இடத்திற்கு வந்தார், அவரிடமும் மாட்டிக் கொள்ளாமல் கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில், ராதிகா, கோபியை பாக்கியா வீட்டுக்கு சர்ப்பிரைஸாக அழைத்து செல்கிறார். பாக்கியா வீட்டுக்கு போகலாம் என்று சொன்னதும் கோபியின் முகம் மாறுவதை ராதிகா நோட் செய்கிறார்.

எந்த காரணம் சொல்லியும் தப்பிக்க முடியாது, இன்று பாக்கியா டீச்சரை சந்தித்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கிறார்.