அந்த இடத்தில் கைவைத்து சில்மிஷம் செய்த நபர் - கன்னத்தில் பளார் விட்ட பாக்யலட்சுமி நடிகை!

Serials Tamil Actress
By Sumathi Apr 03, 2023 02:30 PM GMT
Report

இடுப்பில் கைவைத்து சில்மிஷம் செய்த நபரை கன்னத்தில் அடித்ததாக பாக்யலட்சுமி நடிகை தெரிவித்துள்ளார்.

திவ்யா கணேஷ்

சின்னத்திரையில் இன்று பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த இடத்தில் கைவைத்து சில்மிஷம் செய்த நபர் - கன்னத்தில் பளார் விட்ட பாக்யலட்சுமி நடிகை! | Baakiyalakshmi Divya Ganesh Slaps Man Misbehave

இந்த கதாபாத்திரத்தின் மூலம் தற்போது தனக்கென்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார். இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒருநாள் இரவு நேரத்தில் ஐதராபாத்தில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை வரும்போது, என் இடையில் ஏதோ ஓடுவதுபோன்று ஒரு உணர்வு இருந்தது.

சில்மிஷம்

இதையடுத்து பார்த்தபோது எதுவுமே இல்லை. பின்னரும் அதேபோன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது தான் ஒரு நபர் இந்த கேவலமான செயலை செய்தது தெரியவந்தது. இதனால் செம்ம டென்ஷன் ஆகிவிட்டேன்.

அந்த இடத்தில் கைவைத்து சில்மிஷம் செய்த நபர் - கன்னத்தில் பளார் விட்ட பாக்யலட்சுமி நடிகை! | Baakiyalakshmi Divya Ganesh Slaps Man Misbehave

உடனடியாக எழுந்து அந்த நபருக்கு கன்னத்திலேயே 4 அறை பளார் பளார்னு விட்டேன். பிறருக்கும் இதுபோன்று சம்பவங்கள் நடக்கலாம். அந்த சமயத்தில் இதனை சகித்துக் கொண்டு கடந்து செல்லாமல், உடனடியாக அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.