ஆயுத பூஜை விடுமுறை - சென்னையில் இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ சேவை
தொடர் விடுமுறையையொட்டி மக்கள் வெளியூர் செல்வதால் சென்னையில் இன்றிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் இன்று (13.10.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் இன்று நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.
நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுப்பதற்காக அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்ய் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.