விண்ணை பிளந்த "ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்" வந்தார் ஸ்ரீ ராமர் - பிராண பிரதிஷ்டை நடைபெற்றது..!
அண்மையில் ராமர் கோவில் பிரதிஷ்டை நடைபெற்றுள்ளது.
அயோத்தி ராமர் கோவில்
1528-ஆம் ஆண்டு துவங்கிய ராமர் கோவில் விவகாரம், 500 ஆண்டுகள் கழித்து 2024-ஆம் ஆண்டில் முடிந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு - கலவரம், வழக்குகள், முறையீடல்கள் என பல கட்டங்களை தாண்டி வந்த ராமர் கோவில் விவகாரம், தற்போது முழுமை பெற்றுள்ளது.
இந்துத்துவ அமைப்புகள் கொண்டாடும் இந்த விழாவின் காரணமாக உத்திரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி நகரமே விழா கோவில் பூண்டுள்ளது.
12.05 மணி துவங்கிய ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு, மிகவும் நல்ல நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ள சரியாக 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் இடையில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
அப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் கோயிலில் மலர்கள் தூவப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.