இளம் இந்திய கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்
மாரடைப்பு காரணமாக சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிவந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர் அவி பாரோத் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை சீசனில் சௌராஷ்டிரா அணி வெற்றிக்காக முக்கிய பங்காற்றிய அவி பாரோத் ஹரியானா மற்றும் குஜராத் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இதனிடையே அவிக்கு வீட்டில் இருக்கும்போது மாராடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
38 முதல் தர கிரிக்கெட் போட்டிகளை விளையாடியுள்ள அவர் 1,547 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் அவி மரணத்துக்கு சவ்ராஷ்ரா கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 53 பந்துகளில் 122 ரன்களை விளாசி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய அவி பாரோத்தின் மரணம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.