அக்கினி சிறகே எழுந்து வா: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் அவனி லெகாரா சாதனை
டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டாவது பதக்கமாக வெண்கலம் வென்று அவனி லெகாரா அசித்தியுள்ளார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 ஆம் தேதி முதல் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாராலிம்பிக் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்த நிலையில் மகளிருக்கான 50மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இன்றைய போட்டியில் பங்குபெற்ற இந்தியாவின் அவனி, 445.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஏற்கனவே மகளிர் 10மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
PM Modi congratulates Avani Lekhara on bringing home the bronze medal at Tokyo Paralympics
— ANI (@ANI) September 3, 2021
India has won 12 medals at the 2020 Paralympics Games so far pic.twitter.com/jTLPyGT6Q4
இதன்மூலம், பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளனர்