ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட் - ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனது எப்படி?

Kerala Viral Photos
By Irumporai Sep 19, 2022 04:10 AM GMT
Report

கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு லாட்டரிச் சீட்டில் ரூ. 25 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

ஆட்டோ டிரைவருக்கு விழுந்த அதிஷ்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் 32 வயதான ஆட்டோ ஓட்டுநர் அனூப். இவர் கேரள அரசு சார்பாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த ஓணம் பம்பர் லாட்டரியை வாங்கியிருந்தார்.

இந்த லாட்டரிக்கான பரிசுத்தொகை ரூ. 25 கோடி என்ற நிலையில் இந்த லாட்டரியின் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் விழா திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்தார்.

ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட் - ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனது எப்படி? | Auto Driver Wins 25 Crore Lottery In Onam

அதில், 30 வயதான ஆட்டோ டிரைவர் அனுப் என்பவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூபாய் 25 கோடி கிடைத்துள்ளது. இதனை அடுத்து அரசு சார்பில் நடத்தப்பட்ட லாட்டரியில் தனது 25 கோடி பரிசு கிடைத்ததை அடுத்து ஆட்டோ டிரைவருக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

லாட்டரியில் விழுந்த 25 கோடி

நேற்று மாலை தான் இந்த லாட்டரி டிக்கெட் வாங்கினேன் என்றும் 25 கோடி ரூபாய் பணத்தை வைத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்றும் குடும்பத்தாருடன் கலந்து பேசி முடிவு செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  அவருடைய அதிர்ஷ்டத்தை எண்ணி அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட் - ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனது எப்படி? | Auto Driver Wins 25 Crore Lottery In Onam

இந்த நிலையில் பரிசு தொகை குறித்து கூறும்ஆட்டோ ஓட்டுநர் அனூப் இந்த பணத்தை வைத்து என்ன செய்ய போகிறேன் எனத் தெரியவில்லை. இனிமேல்தான் அதைப்பற்றி முடிவு செய்ய வேண்டும். ஆனால், நான் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளேன்.”, எனத் தெரிவித்தார்