மேக்ஸ்வெல் திடீர் அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
கிளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலியாவின் அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கிளென் மேக்ஸ்வெல். இவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன மேக்ஸ்வெல், இதுவரை 149 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 3,990 ரன்கள் குவித்து, 77 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஓய்வு அறிவிப்பு
2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்று, கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி 33.81. ஸ்டிரைக் ரேட் 126.70. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டிதான் மேக்ஸ்வெல் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி.
இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு கவனம் செலுத்தும் வகையில், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை மேக்ஸ்வெல் எடுத்துள்ளார். இவரது திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.