குடியரசுத் தின விழா - அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி... - வீர முழக்கமிட்ட மக்கள்..!

India's Republic Day India Punjab
By Nandhini Jan 26, 2023 12:39 PM GMT
Report

74-வது குடியரசுத் தின விழாவையொட்டி அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டெல்லி 74-வது குடியரசுத் தின விழா

இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா உலகமும் முழுவதும் உள்ள இந்தியர்களால் கொண்டாப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதன் பிறகு, அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு அலங்கார ஊர்தி கம்பீரமாக அணிவகுத்து வந்தது.

attari-wagah-border-flag-punjab-republic-day-2023

அட்டாரி - வாகாவில் கொடி இறக்கும் நிகழ்ச்சி

74-வது குடியரசுத் தின விழாவையொட்டி, பஞ்சாப் அட்டாரி - வாகா எல்லையில் BSF (எல்லை பாதுகாப்பு படை) இன்று பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொண்டது.

இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக வாகா எல்லையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். இதனையடுத்து, அட்டாரி-வாகா எல்லையிலிருந்து 74-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கின.

இந்நிகழ்ச்சியில், அட்டாரி-வாகா எல்லையில் 4 கால் வீரர்களின் அடிதடி பின்வாங்கும் விழா நடைபெற்றது. அதன் பிறகு, வாகா எல்லையில் இரு நாட்டின் கொடிகள் இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரு நாட்டு மக்களும் வீர முழக்கங்களை எழுப்பினர்.