யானை தாக்கி பாகன் உயிரிழப்பு : முதுமலை முகாமில் பரபரப்பு
Elephant
By Irumporai
முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானை ஒன்று தாக்கி அதன் பாகன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதுமலை தெப்பக்காடு
முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி யானைக்கு வழக்கம்போல், காலை உணவு அளிக்க அருகே சென்ற போது, பாகனை திடீரென தாக்கியதில் சி.எம்.பாலன் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாகன் உயிரிழப்பு
தற்போது, முகாமில் நடந்த இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, 2019-ல் சமயபுரம் கோவியிலில் இருந்த மசினி யானை, தனது பாகனை தாக்கி கொன்றதால், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி...! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடிப் போர் எச்சரிக்கை IBC Tamil
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan