திருமணத்தில் துப்பாக்கி விளையாட்டு - மணமகளின் முகத்தை பதம் பார்த்த நெருப்பு - வைரலாகும் Video!
திருமணத்தில் மணமக்கள் ஒரு வகையான துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட போது திடீரென மணமகள் மீது தீப்பற்றியுள்ளது.
விபரீத பரிசு
தற்போதைய காலகட்டத்தில் திருமண ட்ரெண்டே மாறிவிட்டது. மணமக்கள் நடனம் ஆடியபடி மணமேடைக்கு வருவது, வேடிக்கையான பரிசுகள் வழங்குவது, அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன்பு முகம் சுளிக்கும் வகையில் தற்போது போட்டோஷூட்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சில நேரங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மணமக்களுக்கு கொடுக்கும் பரிசுகள் விபரீதத்தில் சென்று முடிகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் திருமணத்தின்போது மணமக்களுக்கு கொடுக்கப்பட்ட பரசு ஒன்று மணப்பெண்ணின் முகத்தை பதம் பார்த்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணத்தில் பரபரப்பு
அதில், மணமக்கள் இரண்டு பேரும் கையில் ஒரு வகையான துப்பாக்கியுடன் காட்சி கொடுக்கின்றனர். அந்த துப்பாக்கியால் சுட்டால், தீ ஜுவாலைகள் வெளிவரும் துப்பாக்கி ஆகும். அதனை மணமக்கள் இருவரும் கையில் வைத்துள்ளனர்.
அப்போது மணமகள் அந்த துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தியபோது திடீரென அந்த துப்பாக்கி வெடித்தது. அதிலிருந்து தீப்பிழம்பு வந்து மணமகளின் முகத்தை தாக்கியது. உடனே உறவினர்கள் ஓடிச்சென்று மணமகளை காப்பாற்றினர். இந்த சம்பவத்தால் திருமணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

விடுதலை புலிகளின் தேவைக்காக இலங்கை வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் :கொக்கரிக்கும் விமல் வீரவன்ச IBC Tamil
